கோட்டக்குப்பம் அருகே ஆபத்தான பகுதியில் அலை சறுக்கு பயிற்சி


கோட்டக்குப்பம் அருகே, தடை செய்யப்பட்ட கடற்கரை பகுதியில் கடல் சறுக்கு விளையாட்டு பயிற்சி நடந்தது. இதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் துாண்டில் முள் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குளித்த பலர் கடல் நீர் சுழற்சியில் சிக்கி இறந்துள்ளனர்.

இதனால், இந்த பகுதியில் காவல் துறையினர் குளிக்க தடை விதித்து, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன் வீசிய ‘மாண்டஸ்’ புயல் காரணமாக, இன்னமும் கடல் சீற்றமாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த சறுக்கு விளையாட்டு பயிற்சியாளர், பலருக்கு கடலில் சறுக்கு விளையாட்டு பயிற்சி அளித்தார்.

அப்பகுதி மீனவர்கள் பயிற்சியாளரிடம், ‘விபத்து நடைபெறும் பகுதி; இங்கு கடல் சறுக்கு விளையாட வேண்டாம்’ என கூறியும், அவர் கண்டு கொள்ளாமல் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தினார். போலீசார் காலை நேரத்தில் ரோந்து சென்று, தடை செய்யப்பட்ட பகுதியில் பயிற்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s