


தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான கோட்டுக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் விழுப்புரம் மாவட்ட மாநில இணை செயலாளர் மோகன், அவர்கள் மாவட்ட துணைத் தலைவர் முபாரக் அலி அவர்கள், மாவட்ட பொருளாளர் சுசிந்திரன் அவர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்தை அமைத்துக் கொடுத்து சிறப்புரை ஆற்றினர்.
சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் இரண்டாவது முறையாக ஆன்சர் பாஷா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக முஹம்மது வக்கீல் அவர்களும், பொருளாளராக கமால் ஹசேன் அவர்களும், இணைச் செயலாளராக சாகுல் அமீது அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்கள் ஹலில் பயாஸ், கதிர்வேல் செட்டியார், முகமது இலியாஸ், ஹமீது அத்தாவுள்ள, முஹம்மது பாரூக் , சவுரிராஜன் ஆகியிரும், துணை செயலாளராக பாபு என்கிற பக்ருதீன், என் முகமது இலியாஸ், சபீர் அகமது, துபையில் அகமது, தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய தீர்மானங்களாக நமது சங்கத்தின் சார்பில் அனைத்து வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் மூன்றாம் கண் சிசிடிவி கேமரா மூன்றாம் கட்டமாக மகாத்மா காந்தி வீதி எம் ஜி ரோட்டில் முழுமையாக அமைக்கப்படும்.
நமது வியாபாரிகளுக்காக கோட்டகுப்பம் நகராட்சி ஆணையரிடம் முறையாக மனு அளித்து வியாபாரிகளுக்காக பொது கழிப்பிடம் & வாடிக்கையாளர்கள் பயன்படக்கூடிய பேருந்து நிழல் கட்ட முறையிடப்படும்.
உரிய அனுமதியின்றி உள்ளூர் வியாபாரிகளை பாதிக்கக்கூடிய நடமாடும் வெளியூர் வாகன வியாபாரிகளை அனுமதிக்க கூடாது என்று கோட்ட குப்பம் நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்படும்
வருடத்திற்கு ஒருமுறை வியாபார திருவிழா நடத்திட சங்கத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய யாரேனும் இயற்கை எழுதினால்
அவர்கள் குடும்பத்திற்கு சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து
தங்கள் பங்குகளை வழங்கி ஒரு சிறந்த தொகையை அந்த குடும்பத்திற்கு வழங்கிட இந்த கூட்டத்தில் வாயிலாக தீர்மானம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிக நல வாரியத்தில் பதியாதவர்களுக்கு மீண்டும் பதியக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி தரப்படும்.
போன்ற 15 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர்,துணை தலைவர்கள், துணைச் செயலாளர், அனைவரும் கூட்டத்தில் சிற்றரையாற்றினர். நன்றிஉரை முஹம்மது இலியாஸ் அவர்கள்.