கோட்டக்குப்பம் கடற்கரையில் பல ஆண்டுகள் குப்பை அகற்றப்பட்டு சுத்தமாகியது! களமிறங்கிய நகராட்சி


கோட்டக்குப்பம் கடற்கரையில் பல ஆண்டுகள் குப்பை அகற்றப்பட்டு சுத்தமாகியது ! களமிறங்கிய நகராட்சி

இதுநாள் வரை கோட்டக்குப்பம் கடற்பரப்பைக் காணவந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளும் பரவி கிடந்த குப்பைகளைப் பார்த்து முகம் சுளித்துவந்தனர். கடற்கரை கரையோரம் முழுவதும் குப்பைகள் அதிக அளவில் இருந்ததால் ஒருபுறம் துர்நாற்றம் வீசுவதோடு கடற்கரை அழகு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வந்தது.

பல முறை பொதுமக்கள் முன்னர் பேரூராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துசென்றும் சரி செய்யாமல் இருந்தனர். சமீபத்தில் கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தேர்தல் நடந்து முடிந்தபின் காட்சிகள் மாறியது. கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் திரு S.S. ஜெயமூர்த்தி அவர்கள் இந்த பகுதியை பார்வையிட்டு இந்த இடத்தை உடனடியாக சுத்தப்படுத்த உத்தரவிட்டார். தற்போது கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டு மக்கள் கடல் அழகை ரசிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

கடற்கரையை சுத்தப்படுத்த உத்தரவிட்ட நகர தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s