கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல் : அமைதியாக நடந்து முடிந்தது


கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 27 வார்டுகளுக்கு நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின.

விழுப்புரம் மாவட்டத்தில் நீண்ட ஆண்டுகளாக பேரூராட்சியாக இருந்த கோட்டக்குப்பம் சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானதற்கு பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதன் முறையாக இன்று நடந்தது.

மொத்தம் 27 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், சுயேட்சைகள் என 145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நகராட்சியில் ஆண்கள் 11,760, பெண்கள் 12,321, 3-ம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 24,083 வாக்காளர்கள் உள்ளனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 27 வார்டுகளில் மொத்தம் 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 2 வாக்குசாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா வழிகாட்டுதல்கள் படி வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின், கையுறை வழங்கப்பட்டது. இதன்பின் வாக்குச்சாவடிக்குள் ஓட்டுப்போட வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

சில வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். காலையில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மதியம் மந்தமாக இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் விறுவிறுப்பு அடைந்தது.

ஒருசில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்ததால் சிறிய அளவிலான தகராறுகள் ஏற்பட்டன. இதைதவிர பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முடிவு வரும் 22 ஆம் தேதி வெளிவரும்.

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் வார்டு வாரியாக பதிவான வாக்குகளின் விபரம்…

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s