கோட்டக்குப்பத்தில் விபரம் தெரியாத அதிகாரிகள் – மனு தாக்கல், சந்தேகம் கேட்க வந்தவர்கள் ஏமாற்றம்..


News: தினமலர்

கோட்டக்குப்பம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு சரியான வழி முறைகளை அதிகாரிகள் கூறாததால் வேட்பு மனு தாக்கல் குறித்த விபரம் கேட்கச் சென்ற வேட்பாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோட்டக்குப்பம் நகராட்சியில் முதல் முறையாக 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. 50க்கும் மேற்பட்டோர் தங்கள் வசிக்கும் பகுதி எந்த வார்டு மற்றும் ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது என தெரிந்து கொள்ளவும், வேட்பு மனு தாக்கல் விபரங்கள் குறித்து அறியவும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான வழி முறைகள் தகவல் பலகையில் சரியான முறையில் இல்லாததால், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் அதிகாரிகளிடம் அதற்கான தகவல்களை கேட்டனர்.

அதிகாரிகளுக்கு எந்ததந்த பகுதி எந்த வார்டுகளின் கீழ் வருகிறது என்ற விபரங்கள் தெரியவில்லை. இதனால், விபரம் கேட்டவர்களிடம் மழுப்பினர். நகராட்சி கமிஷனர் பானுமதியை சந்திக்க சில வேட்பாளர்கள் சென்றனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் அனுமதி தர மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு தாக்கல் குறித்த விபரம் தெரியால் திரும்பிச் சென்றனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s