விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் வாரிசுகள் ரூ.50 ஆயிரம் இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு தமிழக அரசு சாா்பில் கரோனா இழப்பீட்டுத் தொகை ரூ.50,000 வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு இதுவரை 850 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 515 பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 44 பேரின் விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவையாக இருப்பதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 விண்ணப்பங்களுக்கு சட்ட ரீதியான காரணங்களால் இழப்பீடு வழங்க இயலாத நிலை உள்ளது. எஞ்சிய விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது.

ஆகவே, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு கோரி இதுவரை விண்ணப்பிக்காத வாரிசுதாரா்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s