புதிய கல்விக்கொள்கை : 6, 7, 8ம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு தேர்வுகள்: ஜன.5ம் தேதி தொடக்கம்


நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் ஆண்டு இறுதித் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். இவற்றை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்யப்படுவர். இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறையும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சூழலில் வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொழிப்பாடங்கள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 3.15 மணி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற பாடங்கள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்விற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை அளிக்கப்படும். இதையடுத்து பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பாடத்திட்டங்கள் எதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக அதிகாரிகள் தெரிந்து கொள்வர்.

அதற்கேற்ப ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமான பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் 34ஆக அதிகரித்துள்ள நிலையில், அடுத்து வரும் பண்டிகை காலங்களை ஒட்டி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதனால் புதிய கட்டுப்பாடுகள் ஏதும் அமல்படுத்தப்படுமா? பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் நடத்துவதில் சிக்கல்கள் எழுமா? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s