கோட்டகுப்பதில் இடிந்து விழும் நிலையில் அரசு நூலக கட்டிடம். புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் உள்ள அரசு நூலகம் பல்வேறு வரலாற்று புத்தகங்களைக் கொண்ட நூலகமாகும். ஆனால் தற்போது அந்த நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேலும் கட்டிடம் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்வதற்கு முன் சேதமான அரசு நூலக கட்டிடத்தை அகற்றி புதிய நூலக கட்டிடத்தை கட்ட மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புத்தக வாசிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ : அப்துல் சமத் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)