
தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நாளை (சனிக்கிழமை – 11/12/2021) நடைபெறுகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் பகுதியில் மொத்தம் 10 இடங்களில், காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:
- அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
- பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
- சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
- அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
- அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
- அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
- அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
- அரசு துவக்கப்பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
- முன்னாள் தலைவர் வீடு, ரஹமத் நகர்.
இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.