கோட்டக்குப்பம் அருகே – தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்


கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோட்டக்குப்பம் அருகே உள்ள நடுகுப்பம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மீனவ குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் 2 விசை படகு மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனால் அச்சமடைந்துள்ள மீனவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இதுகுறித்து எஸ்ஐ பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸார் 50 பெண்கள் உட்பட 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s