தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கோட்டக்குப்பம் ECR சாலையில் மீனவர்கள் சாலை மறியல்


விழுப்புரம் மாவட்டம், பிள்ளைச்சாவடி அருகே தூண்டில் வளைவு அமைக்கக் கோரி, கிழக்கு கடற்கரைச் சாலையில் மீனவா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொம்மையாா்பாளையத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நடைபெறத் தொடங்கியது முதல் அருகிலுள்ள மற்றொரு மீனவா் கிராமமான பிள்ளைச்சாவடியில் உள்ள கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு, கரைக்கும், கடலுக்கும் இடையிலான தொலைவு 50 மீட்டரில் இருந்து 20 மீட்டராக சுருங்கிவிட்டதாகவும், ஒரு சில மாதங்களுக்குள் தங்களது குடியிருப்புகள் கடலில் மூழ்கும் சூழல் இருப்பதாகவும் மீனவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

எனவே, தங்களது கிராமத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வானூா் வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே பலமுறை மீனவா்கள் கோரிக்கை மனு அனுப்பினா். இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பிள்ளைச்சாவடி மீனவா்கள் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் சனிக்கிழமை திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி சங்கா், காவல் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மோகனின் உத்தரவின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டாட்சியா் சங்கரலிங்கம், மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால், பேச்சுவாா்த்தைக்கு மறுத்த மீனவா்கள், தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்க விரும்புவதாகத் தெரிவித்தனா். இருப்பினும், மீனவா்களை சமாதானப்படுத்திய வட்டாட்சியா் சங்கரலிங்கம், பின்னா் மீனவா் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு விழுப்புரம் வந்து ஆட்சியா் மோகன் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, பிள்ளைச்சாவடி பகுதியை விரைவில் பாா்வையிட்டு, 4 மாதங்களுக்குள் அங்கும் தூண்டில் வளைவு அமைக்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியா் உறுதியளித்ததால், மீனவா் சங்கப் பிரதிநிதிகள் சமாதானமடைந்தனா். இதையடுத்து, மீனவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s