
* ஏழு நாள்களுக்கு மேல் ஆகியும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
* ஒரு நாளில் குறைந்தது பத்து முறையேனும் உங்கள் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவினைத் தொடர்ந்து கண்காணியுங்கள். ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் குறைந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
* கோவிட் 19 ஒரு வைரஸ். அதற்கு எதிராக வீட்டிலிருக்கும் ஆண்டிபயாடிக் (antibiotic) மருந்துகள் பயன்படுத்தாதீர்கள். ஆன்டிபாக்டீரியல் கிருமி நாசினிகளும் பயனளிக்காது.

Finger Pulse Oximeter
* மருத்துவரின் பரிந்துரையின்றி ரெமிடிஸ்விர், ஸ்டெராய்டு மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்.
* உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறது என்றோ, இல்லையென்றோ நீங்கலாக ஒரு முன்முடிவிற்கு வராதீர்கள். முறையாகப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
* உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை மருத்துவரிடம் சொல்லிக் கலந்தாலோசித்துக் கொண்டு வீட்டில் இருப்பதா, அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா என முடிவெடுங்கள்.
* குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அனைவரும் வீட்டுச் சிகிச்சையிலிருந்தாலும், உங்களுக்குள் தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடியுங்கள்.
* மது அருந்துவதைத் தவிருங்கள். அது உங்களை நீரிழப்புக்கு (dehydrate) உள்ளாக்கும். மேலும், கொரோனா நோய் தொற்று இருப்பவர்கள் மது அருந்தினால் கல்லீரல் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
* வீட்டினுள் நடமாடினால் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள்.
* வேறொருவருக்கு கொரோனா பாதித்து, அவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அதே மருந்துகளை நீங்களும் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது. ஒருவருக்கு ஒரு மருந்து கொடுக்கலாமா கூடாதா என்பதை மருத்துவர் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
* கொரோனா பாதித்த ஒருவர், குறைந்தது 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம்.
* வாயை மூடிக்கொண்டு, மெதுவாக மூக்கின் வழியே காற்றைச் சுவாசித்து, வாயின் வழியே காற்றை வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
* மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு பகுதியில் வலி, அழுத்தம், முகம் மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல், விழித்திருக்க முடியாமல் இருப்பது போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.