வீட்டிலிருந்தபடியே கொரோனாவிலிருந்து மீளச் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை:


* ஏழு நாள்களுக்கு மேல் ஆகியும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

* ஒரு நாளில் குறைந்தது பத்து முறையேனும் உங்கள் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவினைத் தொடர்ந்து கண்காணியுங்கள். ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் குறைந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

* கோவிட் 19 ஒரு வைரஸ். அதற்கு எதிராக வீட்டிலிருக்கும் ஆண்டிபயாடிக் (antibiotic) மருந்துகள் பயன்படுத்தாதீர்கள். ஆன்டிபாக்டீரியல் கிருமி நாசினிகளும் பயனளிக்காது.

Finger Pulse Oximeter

Finger Pulse Oximeter

* மருத்துவரின் பரிந்துரையின்றி ரெமிடிஸ்விர், ஸ்டெராய்டு மருந்துகளை உட்கொள்ளாதீர்கள். 

* உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறது என்றோ, இல்லையென்றோ நீங்கலாக ஒரு முன்முடிவிற்கு வராதீர்கள். முறையாகப் பரிசோதித்துக் கொள்வது அவசியம். 

* உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை மருத்துவரிடம் சொல்லிக் கலந்தாலோசித்துக் கொண்டு வீட்டில் இருப்பதா, அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா என முடிவெடுங்கள். 

* குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அனைவரும் வீட்டுச் சிகிச்சையிலிருந்தாலும், உங்களுக்குள் தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடியுங்கள்.

* மது அருந்துவதைத் தவிருங்கள். அது உங்களை நீரிழப்புக்கு (dehydrate) உள்ளாக்கும். மேலும், கொரோனா நோய் தொற்று இருப்பவர்கள் மது அருந்தினால் கல்லீரல் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

* வீட்டினுள் நடமாடினால் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள். 

* வேறொருவருக்கு கொரோனா பாதித்து, அவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அதே மருந்துகளை நீங்களும் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது. ஒருவருக்கு ஒரு மருந்து கொடுக்கலாமா கூடாதா என்பதை மருத்துவர் மட்டுமே முடிவு செய்ய முடியும். 

* கொரோனா பாதித்த ஒருவர், குறைந்தது 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம். 

* வாயை மூடிக்கொண்டு, மெதுவாக மூக்கின் வழியே காற்றைச் சுவாசித்து, வாயின் வழியே காற்றை வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

* மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு பகுதியில் வலி, அழுத்தம், முகம் மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல், விழித்திருக்க முடியாமல் இருப்பது போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s