
கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
9-3-2021., செவ்வாய்
வானூர் வட்டாட்சியர், கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் கோட்டக்குப்பம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அணைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களின் உரிமையான வாக்குகளை செலுத்தவும், தங்களின் வாக்குகள் விற்பனைக்கு இல்லை, மாற்றுதிறனாளிகள் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு மற்றும் 100% சதவீதம் வாக்கு பதிவு நடைபெற கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாதிரி வாக்கு சாவடி மற்றும் வாக்கு செலுத்தும் செயல் முறை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வானூர் வட்டாட்சியர் அலுவக குழு, வருவாய் ஆயிவாளர், செயல் அலுவலர் , பேரிடர் திட்ட அலுவலர் , ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தகவல் : KIWS கோட்டக்குப்பம்