கோட்டக்குப்பதில் நடைபெற்ற 72 வது குடியரசு தின நிகழ்வுகள்


கோட்டக்குப்பம் KIWS சார்பில் குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
26-01-2021., 72வது இந்திய குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் பரகத் நகர் அங்கன்வாடி மைய வளாகத்தில்
மற்றும் கோட்டக்குப்பம் தைக்கால் திடல் அங்கன்வாடி மைய வளாகத்தில் ஆக இரண்டு இடங்களில் கோட்டக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிவ்ஸ் உறுப்பினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மாணவ செல்வங்கள் கலந்து கொண்டனர்.
கோட்டக்குப்பம், அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் இன்று 72-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது சங்க நிர்வாகி இஹ்சானுல்லாஹ் கொடி ஏற்றி வைத்தார்கள்.
சங்க செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் குத்தூஸ், முஸ்தபா, பிலால் முஹம்மது, ரஹமத்துல்லா, உபைதுல்லாஹ் மற்றும் மதரஸா மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் 72-வது குடியரசு தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஜனாப் அலி அகமது அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
KIMS சங்க சார்பில் இன்று 72-வது குடியரசு தின விழா , ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி மற்றும் செயலாளர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.
கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 72-வது குடியரசு தின விழா, இன்று சங்க அலுவலகத்தில் உயர்திரு காவல் ஆய்வாளர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
கோட்டகுப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று 72 வது குடியரசு தினம் கொடியேற்ற நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் செயல் அலுவலர் திரு ராமலிங்கம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் திருமதி பத்மா முன்னிலையில் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s