வீடு தேடி வரும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி : அம்மா கோவிட்-19 திட்டம்


இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம் செலுத்த வேண்டும்.

உலகம் முழுவதும் இரண்டு கோடி பேர் கொரோனா தொற்று ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 25 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 3 லட்சம் பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் குணமடைந்திருந்தாலும் ஏராளமானோர் வீட்டுத்தனிமையில் இருக்கின்றனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்காக அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தமிழக அரசு வழங்க உள்ளது.

இதற்காக அம்மா கோவிட் 19 என்ற திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுடன் மருத்துவக் குழு தொடர் கண்காணிப்பில் இருக்கும் என்றும், கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி, முகக்கவசங்கள், வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுவதோடு, காணொலி காட்சி மூலமாக மருத்துவர்கள் ஆலோசனையும் வழங்க உள்ளனர்.

வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு மன நல ஆலோசகர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும், அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவிகிதம் பேர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் இல்லத்திற்கே சென்று சிகிச்சை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சென்னையில் தொடங்கி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது. இது தவிர கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டு குணமாகி வீடு திரும்பியுள்ள லட்சக்கணக்கானவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து சொல்லும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s