கோட்டக்குப்பம் அரசு பள்ளி பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி : சி.இ.ஓ., பாராட்டு


கோட்டக்குப்பம் அரசு பள்ளி பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி : சி.இ.ஓ., பாராட்டு

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை, சி.இ.ஓ., முனுசாமி பாராட்டி, கவுரவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி கடந்த இரு ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுதேர்வில் பள்ளி மூன்றாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. நேற்று முன்தினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியை ஆய்வு செய்தார். முன்னதாக செய்த ஆய்வின் போது, பள்ளி மூன்றாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் பரிசு வழங்கப்படும் என மாணவர்களிடம் கூறி இருந்தார்.இதன்படி பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய 39 மாணவர்களும், தேர்ச்சியடைந்ததையொட்டி, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, அவர்களுக்கு 12ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்று மற்றும் பரிசு பொருள் வழங்கி கவுரவித்தார். மாணவர்களின் 100 சதவீத வெற்றிக்கு ஆசிரியர்களை பாராட்டினார்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s