சுவர்களுக்கும் வாயிருக்கும், அவற்றோடு பேசும் சுட்டி குழைந்தைகள்….


கோடை விடுமுறை ஆரம்பம் ஆகியாச்சு, குழைந்தைகள் பல சுட்டி செயல்கள் பண்ணுவார்கள் அதில் ஒன்று சுவர் சித்திரம். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற பழமொழியை ஆசிரியர்கள், பெரியவர்கள், தந்தையார் என்று பல பேர் சொல்லியிருப்பார்கள். ஆனால், குழைந்தைகள் அதைச் செயல்படுத்திக் காட்டும்போதுதான் அந்தப் பழமொழியையே உணர முடிகிறது.

குழைந்தைகள் தனது ஓவியங்களைக் காகிதங்களில் வரைந்து அவற்றை வீட்டின் கதவுகளிலும், பீரோவிலும் ஒட்டுவது இப்போதைய பழக்கம். அவ்வப்போது சுவர்களிலும் வண்ணம் தீட்டுகிறார்கள்.

வாடகை வீட்டில் வசிக்கும் குழந்தைகள் சுவரில் கிறுக்கக் கூடாது என்பது இந்திய பீனல் கோடில் இன்னும் சேர்க்கப்படாத ஆனால், நடைமுறையில் இருக்கிற சட்டம். ஆனால், வீட்டோடு சேர்த்து மனிதத்துக்கும் சொந்தமாக இருக்கும் சில ‘மனித ஓனர்கள்’ குழந்தைகளின் கைவண்ணத்தில் தலையிடுவதில்லை. இன்னும் சில உத்தமர்கள் வாடகை வாங்க வரும்போது குழந்தைகளின் ஓவிய மழலை வண்ணத்தை மகிழ்ந்து ரசிப்பார்கள்.

காலையில் புறப்படும்போது சுவர் சுத்தமாக இருக்கும். மாலை வந்து பார்த்தால் அதில் கோடுகள், புள்ளிகள், கண்கள், மான்கள், பூக்கள் என்று சுவரெல்லாம் சோலையாகியிருக்கும். பென்சில், பேனா என வீட்டில் இருக்கும் எழுதுகோல்கள் எல்லாம் தூரிகைகளாகிவிடும்.

குழந்தைகள் சுவரில் எழுதும்போது இது வாடகை வீடா, சொந்த வீடா என்ற நினைப்பெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை. மழலை மனத்தின் படைப்பாற்றல் சுவர் கிறுக்கல்களிலிருந்தே தொடங்குகிறது. எப்படி மெல்ல மெல்ல ஒரு குழந்தை பேசத் தொடங்கும்போது ங்ஙா…. ம்மா…..ப்பா…த்தீ… என்று மொழியின் துகள்களைத் தூவுகிறதோ அவ்வாறே எழுதும்போதும் புள்ளிகள், சிறு கோடுகள் என்று எழுத்துத் துணுக்குகளைச் சுவர்களில் வரைகிறது.

மழலைகளைப் பேசவைத்து ரசிக்கிற அளவுக்கு எழுத வைத்து ரசிப்பது குறைவு என்றே நான் பார்த்த வரையில் கருதுகிறேன்.

குழந்தைகளின் மழலைப் பேச்சைத் தடுக்காத நாம், மழலை எழுத்தைத் தடுப்பதும், பென்சிலைப் பிடுங்கிப் போடுவதும், அதட்டுவதும் நல்லதல்ல. இன்று சுவரில் கிறுக்கும் குழந்தை கையெழுத்து பழகுகிறது… நாளை அது அழகியல் ஓவியமாகலாம், பொறியியல் வரைபடம் ஆகலாம். உலக வரைபடத்தைப் புதிதாக நிர்ணயிக்கலாம்.

விரல்களை பென்சில் மேல் குவித்து அதிலிருந்து கோடுகளையும், வரையறுக்கப்படாத இன்ன பிற வடிவங்களையும் குழந்தைகள் செதுக்கும்போது சுவர்களும் பேசுகின்றன.

சுவர்களுக்கும் காதிருக்கும் என்பது பெரிய மனிதர்களின் சந்தேக உலகம். ஆனால், சுவர்களுக்கும் வாயிருக்கும், அவற்றோடு பேசலாம் என்பது மழலைகளின் சந்தோஷ உலகம், அவற்றை ரசிப்பதே தனி சுகம். குழந்தைகள் ஊருக்குப் போயிருக்கும் போதும் சுவர்களைப் பார்த்தால் சுவர்கள் வழியே அவர்கள் பேசுவார்கள். இனிமேல் குழைந்தைகள் வரைந்தால் ரசிப்போம்.ஆரா

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s