கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு – மக்கள் அவதி
கோட்டக்குப்பம் காலி மனைகள் மற்றும் பொது இடங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர் தேங்கி நிற்கும் இடங்களில் பன்றிகள் அதிகளவு மேய்வதால், கொசுக்கள் மற்றும் விஷப் பூச்சிகள் உற்பத்தியாகின்றன.கோட்டக்குப்பம் பேரூராட்சியில் நாய், பன்றிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டன. கோட்டக்குப்பம் அமைதி நகர் 3 வது தெருவில் நாய், பன்றிகள் தொல்லை பெருகிவிட்டன.அவை வீதிகளில் குவிந்துள்ள குப்பைகள், கழிவுநீர் குட்டைகளில் உலவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவுகிறது. பொது மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், பன்றிகள் பெருக்கமடைந்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
எனவே, அமைதி நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Government officers and government intha maathiri issues ku mukkiyathuvam kudutthe aaganum. Amaidhi nagar mattum illa ithe maathiri pala idangalla irukku aana veliya vara maatuthu, ippo intha vishayathula government ippo oru correctaana mudivu edutthu antha area va clear panni kodukkanum. Illana thevai illaatha decease la vara aarambicchidum.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
Government officers and government intha maathiri issues ku mukkiyathuvam kudutthe aaganum. Amaidhi nagar mattum illa ithe maathiri pala idangalla irukku aana veliya vara maatuthu, ippo intha vishayathula government ippo oru correctaana mudivu edutthu antha area va clear panni kodukkanum. Illana thevai illaatha decease la vara aarambicchidum.
LikeLiked by 1 person