அஞ்சுமன் அறிவு மையம் ஏற்பாட்டில் 4.8.18 அன்று நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நோயறிதல் முகாமை டாக்டர் L.M. ஷெரீப் தலைமையில் நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி மௌலவி A. பக்ருதீன் பாரூக் மற்றும் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹாமித் முன்னிலை வகித்தனர்.
அஞ்சுமன் செயலாளர் A. லியாகத் அலி அவர்கள் நிகழ்ச்சி குறித்து அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்
முகாமில் India turns Pink அமைப்பினர் தெளிவான வழிகாட்டுதல்களுடன் Power point Presentation ஐயும் வழங்கி கலந்துகொண்ட மகளிர்க்கு பெரும் பயனை அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதி ஒரு மணிநேரத்திற்கு அரங்கில் இருந்த ஆண்கள் முழுமையாக வெளியேறி, பங்கேற்ற பெண்கள் தங்களின் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சம்..
எங்கள் பணியைக் காட்டிலும் மும்மடங்கு சிறப்பாக இருக்கிறது ஷாஜஹானின் புத்தகம் என்பது ITP அமைப்பினரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதிலும் செவிலியர் சகோ. கீதா பேசும்போது, “தொடர்ந்து இந்த களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கே பல விசயங்களைத் தெளிவுபடுத்தியது இந்த நூல்” என்று சொன்னதில் ஷாஜியைக் காட்டிலும் நாங்கள் அனைவரும் பெருமை கொண்டோம்.
பிரயோஜனமான மாலைப் பொழுதை செம்மையாகத் திட்டமிட்டு நடத்திய அஞ்சுமன் மகளிர் மையப் பொறுப்பாளர்கள் பாராட்டுக் குரியவர்கள். 2030க்குள் மார்பகப் புற்றுநோயால் ஒருவர் கூட மரணிக்கக் கூடாது என்ற குறிநோக்கில் அயராது பாடுபடும் India Turns Pink, Puducherry Chapterக்கு வாழ்த்துகள்..
அஞ்சுமன் மகளிர் மையம் தலைவர் தஸ்லிமா மலிக் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.