கோட்டக்குப்பம் முராது வீதி பழையபட்டின பாதை தொடங்கி சக்கில் வாய்க்கால் வரை முழுவதும், மற்றும் பள்ளிவாசல் தெரு, தைக்கால் திடல் போன்ற பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் பகுதிகள் உள்ள வாய்க்கால்களை சரி வர பராமரிக்காமல் விட்டதின் விலைவாக அதில் மணல், குப்பை சேர்ந்து கால்வாயின் ஆழம் குறைந்துள்ளது. இதன் காரணமாக மழை நீர் மற்றும் கழிவு நீர் தெருவில் ஓடி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாதி மஹால் மற்றும் தர்கா அருகில் தண்ணீர் தேங்கி நின்றும் தெருவில் ஓடியும் அருவருப்பை உருவாகியுள்ளது.
வருகிற மழை காலத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி துரித நடவடிக்கை எடுத்து அணைத்து வாய்க்கால்களையும் துர் வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் தெருவில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்து கிஸ்வா அமைப்பினர் சார்பாக இன்று பேரூராட்சி செயல் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.