மிகச் சிறப்பாக நடைபெற்ற மாணவர் இயக்கங்களின் உரையாடல் நிகழ்ச்சி..
நிகழ்ச்சி குறித்து அஞ்சுமன் முன்வைத்த நோக்கத்தின் விளக்கவுரையாகவே நிகழ்ச்சி அமைந்தது கூடுதல் சிறப்பு.. விவாதத்தை சீராக அமைத்துக்கொள்ள வழங்கப்பட்ட 4 அம்ச கருப்பொருளுக்கு உள்நின்று, வகுக்கப்பட்ட நெறிமுறைகளை மீறாமல் மிகச் சிறந்த உரையாடல் அரங்கைக் கட்டமைத்த கருத்தாளர் அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆவர்..
இச்சனநாயக உரையாடலை மேற்கொண்ட கருத்தாளர்கள் அன்பிற்கினிய அஹமத் ரிஸ்வான் (SIO) அப்ஜெல் பாஷா (SMI), வதனுர் சே சிவா (RSF) அனஸ் சுல்தானா (SFI), எழிலன் (Aisf) , சுஹைல் அப்துல் ஹமீது (ASA) ஆகிய அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்..
விவாதத்தின் இடையீட்டாளர்களாக அமைந்த தோழர்கள் ஜலால் , விசாகன் மையக் கருத்துக்களை உள்வாங்கி செம்மையான தொகுப்புரையை வழங்கினர். இதற்கு தலைமையேற்று நெறிபடுத்திய பேரா. இளங்கோ நாகமுத்து தம்முடைய தனி முத்திரை பதித்த நிறைவு கருத்துக்களை பதிவு செய்து நிகழ்ச்சியை வேறொரு தரத்திற்கு உயர்த்தினார்..
நோக்கர்களில் பாலசுப்ரமணியன் ஜென்னி உட்பட மூவர் தங்களின் கருத்துக்களை அழகாக எடுத்துரைத்தனர். பங்கேற்ற அனைவரும் காலத்தின் தேவையறிந்து முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியையும் அதன் அமைப்பையும் வெகுவாக பாராட்டி இது ஒரு தொடக்கம்.. இது மேலும் வெவ்வேறு மட்டங்களில் தொடரும் என்று மகிழ்ச்சி தரும் செய்தியை வழங்கிச் சென்றனர்..
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.