பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே எவரி பெரிய பள்ளிவாசலில் இன்று 12/05/2018, 5வது இஸ்லாமிய மாநாடு இனிதே நடைபெற்றது.
மாநாட்டில் ஹாஜி.பஷீர் அஹமத் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.
முன்னதாக லண்டனில் இருந்து வந்திருந்த அல்ஹாஜ். முஹம்மத் இப்ராஹிம் உலவி அவர்கள் திருக்குரான் கூறும் பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அடுத்து இலங்கையில் இருந்து வந்திருந்த அல்ஹாஜ் ஷம் ஹுன் ரமலான் அவர்கள் திருக்குரான் மீதான நமது கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மதியம் அனைவருக்கும் சுவையான பகல் உணவு வழங்கப்பட்டது.
இரண்டாம் அமர்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த சித்த மருத்துவர் அஷ்ரப் அலி அவர்கள் மாநபி வழியில் மருத்துவம் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள்.
அடுத்து இந்தியாவிலிருந்து வந்திருந்த மௌலவி யூசூப் சித்தீக் மிஸ் பாஹி அவர்கள் திருக்குரான் அமைத்த சமூகம் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்கள்.
மாநாடு முடிவில் அனைவருக்கும் டீ பப்ஸ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பெருந்திரளாக ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநாடு சிறப்பாக நடத்திய அணைத்து பிரான்ஸ் தமிழ் அமைப்புகளுக்கும் நன்றி.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.