கோட்டக்குப்பத்தில் லைலத்துல் கதர் இரவு பாரம்பரியமான உற்சாகத்துடன் நடைபெற்றது . கோட்டகுப்பம் ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொழுது போக்கும் கடைகள் ஷாதி மஹால் வளாகத்தில் வைக்கப்படுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்கு காவல் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கடைகளில் கோட்டக்குப்பம் பாரம்பரியமான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. ஜாமிய மஸ்ஜிதில் இரவு தொழுகை நடைபெற்றது. முன்னர் சிறப்பு சொற்பொழிவு (பயான்) நடந்தது. முடிவில் உலக நன்மை , மற்றும் அமைதிக்காக துவா செய்தனர். இதில் ஜமாத்தினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.