அன்பிற்குரிய சகோதரர்களே!
2117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
ரமலான் வந்துவிட்டாலே மக்கள் மனதில் ஒரு விதமான சந்தோசம் புன்னகை பிறக்கும் ரமலானில் பல்வேறு நிகழ்சிகளும் சூழல்களும் நமக்கு சந்தோசத்தை ஏற்படுத்தும். அந்த சந்தோசத்தில் ஒன்றுதான் இப்தாருக்காக பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க செல்வது.
பள்ளிவாசலுக்கு சென்று கஞ்சி குடித்து அங்கே கொடுக்கப்படும் வடை, போண்டா, சமோசா, போன்றவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்துவிட்டு வருவது பலரும் விரும்பவார்கள் பள்ளியில் காய்ச்சப்படும் கஞ்சி சிறு குழந்தைகள் சென்று வாங்கி வந்த கஞ்சியை தங்கள் வீ்ட்டில் உள்ள அனைவர்களும் அந்த கஞ்சியை கொன்டு நோன்பு திறப்பது தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் வழக்கமாக உள்ளன.
அல்லாஹ்வின் கிருபையால் நதூரிலும் இந்த நிகழ்வுகள் வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதே சூழல் நமதூரை சுற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் நிகழ்கிறதா? என்று இந்த ரமலானில் நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
நமதூருக்கு அருகே இருக்கும் சமரசம் நகர், திருச்சிற்றம்பரம் கூட்ரோடு பள்ளிவாசல் ,செட்டிகுப்பம் ,செய்யன்குப்பம், தாழங்காடு, வில்லியனுர் கணுவப்பேட்டை புதுநகர் பள்ளிவாசல்களுக்கு போதிய வசதியின்மையின் காரணத்தால் குறிப்பிட்ட நோன்புகளுக்கு பிறகு கஞ்சி காய்ச்சுவதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நமதூரில் உள்ள ரஹ்மத்நகர், பரக்கத் நகர், சல்மான் பள்ளி, பட்டினத்தார் தெரு பள்ளி, ஜமியத் நகர், பரகத் நகர், சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர் போன்ற பள்ளிவாசல் நிலையும் இப்படிதான் இருந்தது. ஆனால் இன்று அல்லாஹ்வின் கிருபையால் அந்த சூழல் மாற்றமடைதுள்ளது. இப்படி ஒரு பரக்கத்தை அல்லாஹ் நமதூருக்கு கொடுத்திருக்கும் போது நம்மை விட கீழ் உள்ள ஊர்களுக்கு கொடுத்து உதவுவது நமது கடமை என்பது நாம் உணர வேண்டும்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் – எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் கூலியை போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது.. (அஹமத், திர்மிதி)
இதன் அடிப்படையில் இந்த வருடம் முதல் கோட்டக்குப்பம் YSA நண்பர்கள் முயற்சியால் – வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களிடம் இந்த ஊர்களுக்காக வசூல் செய்து கொடுத்து அவர்களும் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி செய்ய முயற்சி எடுத்துள்ளோம்.
குறுகிய காலத்தில் செயல்படுத்திய இந்த திட்டத்தால் 6 பள்ளிவாசல்களுக்கு பணம் உதவி செய்யப்பட்டது. இந்த வருடம் 6 பள்ளிவாசலுக்கு ஆரம்பித்து , இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் மேலும் நோன்பு கஞ்சி காய்ச்ச வசதி இல்லாத பல ஊர்களின் பள்ளிவாசலுக்கு உதவ எண்ணியுள்ளோம்.
மேலும் தற்போது முருகேரி, நேசல் மற்றும் பாகூர் சுற்றி இருக்கும் கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் இப்தார் கஞ்சி காய்ச்ச பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
ஆகவே இந்த ஊர்களுக்கு இப்தார் கஞ்சி காய்ச்ச நாட்டமுள்ளவர்கள் அதிக அளவில் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.