பிரான்ஸ் அரசு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவில்லை: தலைமைச் செயலர்
இந்தியாவில் முன்பு இருந்து பிரெஞ்சு பகுதிகளில் வசித்து வந்த 1962-க்கு முன்பு பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் அரசு ஓய்வூதியத் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என புதுச்சேரி தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரெஞ்சிந்திய பூர்வீக முதியோர் சங்கம் என்ற பெயரில் பிரெஞ்சு ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பிறந்த பதிவு போன்ற சான்றிதழ்களையும் மற்றும் பணமும் பெற்றுக் கொள்வதாக புதுச்சேரி பிரெஞ்சு தூதகரக்தால் மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் இதுபோன்ற ஓய்வூதியத் திட்டத்தை ஏதும் பிரான்ஸ் அரசு செயல்படுத்தவில்லை எனவும், இது முழுவதும் பொய்யானது மற்றும் புனையப்பட்ட தகவல் என தெளிவுப்படுத்தி உள்ளது.
அவ்வாறு எந்த ஒரு புதிய சட்டமும் பிரான்ஸ் அரசால் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
அவ்வாறு யாரேனும் பிரெஞ்சு ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி அணுகினால் அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யலாம் என்றார் பரிதா.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.