வானூர் தொகுதி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்


maxresdefault

வானூர் சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் அனைத்து கட்சியின் ஆலோசனை கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.ஞானவேல் தலைமை தாங்கி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தாசில்தார் காமாசிங் முன்னிலை வகித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அவர்களாகவே முன்வந்து அழித்து விடவேண்டும்.

பேனர் வைத்திருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். தனியார் சுவர்களில் இனி விளம்பரம் செய்தால் அவர்களின் அனுமதிபெற வேண்டும் என்றும் கூறினார். திமுக ஒன்றிய அவைத்தலைவர் குப்பன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் சண்முகம், தமிழ்மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜேந்திரன், பாமக ஒன்றிய செயலாளர்கள் பத்மநாபன், பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் இரணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் அரிகரன், வானூர் இன்ஸ்பெக்டர் திருமணி, கிளியனூர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், மரக்காணம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s