மழை வெள்ள பாதிப்பு – கோட்டக்குப்பத்தில் சாலை மறியல்
சமிபத்தில் பெய்த பலத்த மழையால் பர்கத் நகர் ஜமியத் நகர்உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பேரூராட்சி சார்பில் வெள்ள நிவாரணப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி கோட்டகுப்பம் மக்கள் இன்று காலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர்.
இதனால், மகாத்மா காந்தி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலிசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மழை நீரை வெளி யேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை யடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் காரண மாக சில மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.