சபாஷ் – போர்கால நடவடிக்கையில் கோட்டகுப்பம் பேரூராட்சி
கோட்டகுப்பம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீத் மேற்பார்வையில் பர்கத் நகர்,ஜமியத் நகர், மரைகாயர் தோப்பு, சின்ன கோட்டகுப்பம் பகுதிகளில் போர்கால நடவடிகையாக வெள்ள நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மோட்டார் பம்புகள், ஜே.சி.பி./பொக்லைன், அதிவேக நீர் உறிஞ்சும் எந்திரங்கள் ஆகியவற்றுடன், தீயணைப்பு வாகனங்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல அரசியல் இயக்கம் மற்றும் தன்னார்வ இயக்கம் ஆகியோர்களுடன் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுபினர்கள் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அடிகடி வரும் தொடர் மழையால் நிவாரண பணிகளுக்கு பாதிப்பு வருகிறது. இதே போல போர்கால நடவடிக்கை நீடித்தால் நமதுரை சூழுந்துள்ள நீர் முழுவதுமாக வெளியேறும். பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீத் அவர்களின் துரித செயல் பாராட்டுக்குரியது. மக்களுக்கு மருத்துவ முகாம்
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.