கோட்டக்குப்பத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏரி, குளங்களை தூர் வாராத அதிகாரிகளை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுவையை அடுத்த தமிழக பகுதியான ேகாட்டக்குப்பம் பர்கத் நகர், ரகமத் நகர், இசிஆர் ரவுண்டானா, சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதற்கிடையே ஏரி, குளங்களை தூர்வாராததால் மழைநீர் தேங்க வழியில்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றம் சாட்டிய பொதுமக்கள் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த வானூர் தாசில்தார் கமர்சிங் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடம், உணவு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள் இவற்றை உடனே வழங்குமாறும், ஏரி, குளங்களை விரைவில் தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையே இசிஆர் சாலையோரம் உள்ள வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நேற்று நடந்தது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.