பொம்மையார்பாளையம் ஆரோவில் சாலையைச் சேர்ந்தவர் மனோரஞ்சி (69). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் தூங்கிக் கொண்டிருந்த மனோரஞ்சி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த அதிர்ச்சியில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கோட்டக்குப்பம் புறா தோப்பு பகுதியில் கனமழை காரணமாக மின் கம்பி நேற்று அறுந்து கிடந்தது. அதே பகுதியை சேர்ந்த பானு, ஜெயா ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.