கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி சுற்றுலா வந்த தருமபுரி இளைஞர் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், தடாகம் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ராகேஷ் (25). இவர், வியாழக்கிழமை சக நண்பர்களுடன் புதுவைக்கு சுற்றுலா வந்திருந்தார். பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர்கள்bபெரியமுதலியார்சாவடி பகுதி கடற்கரைப் பகுதியில் குளித்துள்ளனர். அப்போது, அலையில் அடித்துச் செல்லப்பட்ட ராகேஷ் கரை திரும்பவில்லையாம்.
இதனையடுத்து, அங்கிருந்த மீனவர்கள் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சின்னமுதலியார்சாவடி கடற்கரைப் பகுதியில் ராகேஷின் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி கோட்டக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.