கோட்டக்குப்பத்தில் 90 ஆண்டு பழைமையான அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் பொது நூலகதின் திறப்பு விழா இன்று 08/03/2015 நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அஞ்சுமன் தலைவர் ஹாஜி. டாக்டர் L.M. ஷரிப் அவர்கள் தலைமை தாங்கி திறந்து வைத்தார்கள். மேலும் நிகழ்சிக்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நூலகதின் பாதுகாவலர் காலம் சென்ற ஜனாப். காஜி ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு விருது வழங்க பட்டது.
விருதினை ஜனாப். காஜி ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகன் ஜனாப். அப்துல் காதர் பெற்று கொண்டார். இந்த நூலகத்தை மீண்டும் திறக்க பாடுபட்ட அஞ்சுமன் புதிய செயலாளர் ஜனாப்.லியாகத் என்னும் கலிமுல்லாஹ் அவர்களையும் மற்றும் புதிய துணை குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரையும் பொது மக்கள் சார்பாக பாராட்டுகிறோம். மேலும் பொதுமக்கள் பலர் பொருள் மற்றும் உடல் உழைப்பு தந்த அனைவர்க்கும் எங்களின் பாராட்டுகள்.