கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு
கோட்டக்குப்பத்தில் நேற்று 16/11/2014 அன்று கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் முகமது பரூக் வரவேற்றார். நகர பொருளாளர் சிவக்குமார், நகர செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் மகஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட சேர்மன் தசரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், திருமலை, பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்துவிட்டு ஜி.கே.வாசனுக்கு ஆதரவு அளித்து அந்த கட்சியில் இணைவது மற்றும் வருகிற 28–ந் தேதி திருச்சியில் ஜி.கே.வாசன் நடத்தும் மாநாட்டில் 50 வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
seammari aadugal eivargal
LikeLike