கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய பொது நல சங்கத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கோட்டகுப்பம் ஷாதி மஹாலில் இன்று 20/07/2014 நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் ஹாஜி A தமிமுல் அன்சாரி தலைமை தாங்கினார். கிஸ்வா சங்கத்தின் தலைவர் A. முஹமது பாரூக் மற்றும் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி Y. எசனுல்லாஹ் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஆலோசகர் ஹாஜி M.I. அப்துல் ஹக்கீம் என்னும் முஜிப் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முன்னதாக மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் பொதுமக்களுடன் இளைஞர் சங்க நிர்வாகிகள் மாற்றும் உறுபினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.