துண்டான கைவிரல்கள் இணைப்பு: PIMS மருத்துவமனையில் வெற்றி
பிம்ஸ் மருத்துவமனையில் துண்டான கை விரல்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில், 38 வயதுள்ள நபர், வலது கையில், கட்டை விரல் தவிர மற்ற நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், துண்டிக்கப்பட்ட விரல்களை இணைக்க முடிவு செய்தனர். பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் சரத் ராம்தாஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, துண்டிக்கப்பட்ட கைவிரல்களை வெற்றிகரமாக இணைத்தனர்.
பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது “” ஒருவரது கை, அல்லது விரல்கள் எதிர்பாரத விதமாக துண்டிக்கப்பட்டால் அருகில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
துண்டித்து மண்ணில் கீழே விழுந்த உடலின் பாகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி அதனை ஐஸ் பெட்டியில் வைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும்.
துண்டிக்கப்பட்ட உறுப்புகளை 6 மணி நேரத்திற்குள் எடுத்து வந்தால் மட்டுமே மீண்டும் இணைக்க முடியும். நவீன மருத்துவ உலகில் இது சாத்தியமானது தான். துண்டிக்கப்பட்ட பகுதியில் ரத்தம் அதிகம் வெளியேறினால் அப்பகுதியை துணியினால் மூட வேண்டும். அந்த பகுதியில் எந்த தையலும் போட கூடாது. எந்தவித ரசாயனப் பொருட்களையும் வைக்கக் கூடாது” என்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
bims hospital very very thanks
LikeLike